
கொழும்பு, ஜூலை 25
நாட்டுக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணி இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களினால் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 51.6 வீத வீழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி கிடைக்கப்பெற்றதுடன், மே மாதத்தில் குறித்த தொகை 304 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்வடைந்தது