நாட்டில் இன்றும் 3 மணி நேர மின்வெட்டு

கொழும்பு,ஜுலை 26

நாட்டில் இன்றும் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதனிடையே,  MNOXYZ ஆகிய வலயங்களில், பிற்பகல் 5.30 முதல் 8.30 வரை மூன்று மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *