கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா தொற்று மீண்டும் உலக நாடுகளில் பரவி வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்காக நான்காவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று(25) நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போதைய சுகாதார நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை இவ்வாரத்திற்குள் முன்னெடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான PCR பரிசோதனையை தேவைக்கேற்ப முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்தணிகளாக கொவிட் நோயாளர்கள் பதிவாகுவார்களாயின், அந்த பகுதிகளை இனங்கண்டு பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனக்க சந்திரகுப்த கூறியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *