
பெரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் அரசாங்கம் தனது தேசிய சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் வெளிநாட்டுக்கடன் உச்சநிலையை எட்டியுள்ளது.
இந்தநிலையில் இத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்கப் பாகிஸ்தானின் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடு களுக்கு விற்றுக் கடனை அடைக் கத் தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.