புங்குடுதீவில் நூறுக்கும் மேற்பட்ட பயன்தரு மரக்கன்றுகள் நாட்டி வைப்பு! (படங்கள் இணைப்பு) 

புங்குடுதீவு ஆலடி சந்தி கலட்டி வரசித்தி விநாயகர் கோயிலின் வீதிகளிலும் சூழலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பயன்தரு மரநடுகை செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) நிர்வாகக்குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் ஏற்பாட்டில் சுமார் நூறு பயன்தருமரக்கன்றுகளும் , மூலிகை மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன .

குறித்த மரநடுகை செயற்பாடு, கனடா ரொரண்டோ மற்றும் புங்குடுதீவு வரசித்தி விநாயகர் ஆலயங்களின் பிரதம குருக்களான பஞ்சாட்சர ஐயர், விஜயகுமாரன் ஐயர் அறுபதாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மரநடுகை செயற்பாட்டில் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா , முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , பிரபல சமூக சேவையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி , தமிழரசு கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் ஆகியோர் உட்பட பல சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டிருந்தனர் .

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *