நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கான ஆயத்த பணிகள் ஆரம்பம் -யாழ் மாநகர முதல்வர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை யாழ்.மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில் யாழ்.மாநகரசபையில் இதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது.

இது தொடர்பாக யாழ்மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவத்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை யாழ்.மாநகரசபை முன்னெடுத்து வருகின்றன.

இதனடிப்படையில் யாழ்.மாநகரசபையிலே இதற்கான கூட்டம் இன்று நடைபெற்றிருந்தது.இதில் பல்வேறு முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டன.

இதற்கமைய ஆகஸ்ட் 1 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடைகள், பயணக்கட்டுப்பாடுகள் நல்லூர் ஆலய சுற்றுச்சூழலில் அமுலுக்கு வர இருக்கின்றன .

கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாது இருந்த காரணத்தினால் இந்த முறை உற்சவ விழாக்கள் மிக சிறப்பாக இடம்பெறும் ,அடியார்களுடைய வருகைகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம் .

தற்சமயம் நாட்டிலே கோவிட் -19 தொடர்பான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன.ஆகவே முகக்கவசம் அணிந்து வருவதை அனைத்து அடியார்களும் பின்பற்ற வேண்டும் என்பதை ஊக்குவிக்கின்றோம் .

அந்தவகையில் சுகாதார நடைமுறைகளை பேணுவது என்பது சுகாதாரமாகவும்,பாதுகாப்பாகவும் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என ஒவ்வொரு அடியார்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பொலிஸ் அதிகாரிகளிடம் முழுமையான பாதுகாப்பினை வழங்குமாறு இன்றைய கூட்டத்தின் போது கேட்டுக்கொண்டுள்ளோம்.

அந்தவகையில் கிட்டத்தட்ட 200 பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கின்றோம் .இது தொடர்பான விடயங்களை சமர்ப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

அத்துடன் தகாத நடவடிக்கைகள் ,திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய விஷமிகளை கண்டுகொள்வதற்காக நல்லூர் ஆலயச் சூழல் முழுவதும் CCTV கேமரா மூலம் கண்காணிப்பு கீழ் கொண்டுவர இருக்கின்றன என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *