தற்போதைய நெருக்கடி நிலையில் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளது.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் மற்றும் கொள்கை நிபுணர்களுடனான விசேட சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அமெரிக்கத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தீர்க்கமான நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறினார்.
முன்னோக்கி செல்லும் பாதை மற்றும் பரந்த அடிப்படையிலான, நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த தேவையான அவசர சீர்திருத்தங்கள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பிறசெய்திகள்