கூட்டாட்சியை வெளியேற்றுவோம்; கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கோட்டாபய – ரணில் கூட்டாட்சியை வெளியேற்றுவோம், இறையாண்மையுள்ள அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருகிறது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும் இதன்போது கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் உள்ள போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுமாறு இன்று காலை பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அத்துடன் இன்றைய தினம் பகல் ஒரு மணிக்குள் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *