ஓட்டோவுக்கு எரிபொருள் பெற பொலிஸ் பதிவை மேற்கொள்க -எரிசக்தி அமைச்சர்

முச்சக்கர வண்டி சாரதிகள் தமது பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் நிலையத்தில் பதிவை மேற்கொண்டு எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முச்சக்கர வண்டி சாரதிகள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே எரிபொருள் பெற முடியும்.

தங்களது வாராந்த எரிபொருள் தேவை தொடர்பான தகவல்களுடன் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

அத்துடன் விவசாய உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்துபவர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும்.

அதேவேளை செஸி எனப்படும் அடிச்சட்ட இலக்கம்மூலம் QR முறைமையை பதிவு செய்ய முடியாத வாகன பயநர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி பதிவு செய்ய முடியும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *