இந்த மாதம் வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பின்படி சில ஆசிய நாடுகளின் பொருளாதாரங்கள் மந்தநிலையை எதிர்கொள்கின்றன.
இதன்படி அடுத்த நிதியாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையானது 2023 இல் மந்தநிலையில் வீழ்வதற்கான நிகழ்தகவு 85 வீதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த நிகழ்தகவு 33 வீதமாக இருந்தது.
ப்ளூம்பெர்க் கருத்துப்படி சீனா மந்தநிலையை அடைவதற்கான நிகழ்தகவு 20 வீதமாகவும், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மந்த நிலைக்கு செல்லும் நிகழ்தகவு 25வீதமாக அமைந்துள்ளது.
நியூசிலாந்து, தைவான், அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை முறையே 33 சதவீதம், 20 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன என்று புளும்பேர்க் அறிக்கை கூறுகிறது.
ஆசியாவின் மந்தநிலையின் ஆபத்து சுமார் 20-25 சதவீதமாக உள்ள நிலையில் அமெரிக்காவுக்கான நிகழ்தகவு 40 வீதம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவுக்கான நிகழ்தகவு 50-55 சதவீதமாக உள்ளது.
பிறசெய்திகள்