போராட்டகாரர்களுக்கு பொலிஸார் இழப்பீடு வழங்க வேண்டும்! மனித உரிமைகள் ஆணைக்குழு

மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்ட களங்கள் மீது கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்திய மனித உரிமைகள் ஆணைக்குழு, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸார் இழப்பீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்கு பின்னர், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்திருந்தவர்களை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ தவறிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளில் இருந்து கடமையில் ஈடுபட்டிருந்த அனைத்து அதிகாரிகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மே 9 ஆம் திகதி தாக்குதலின் போது பொலிஸ் மா அதிபர் அமைதியான போராட்டகார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தவறியுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *