
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை இன்று சந்தித்தார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் எல்டோஸ் மேத்யூ ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிறசெய்திகள்