
கொழும்பு, ஜுலை 26
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன் மற்றும் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான டிப்போக்கள் ஊடாக எரிபொருளை விநியோகிப்பதற்காக வாரத்தில் இரண்டு நாட்களை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.
இதன்படி, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன் மற்றும் பஸ்கள் புதன் மற்றும் சனி ஆகிய கிழமைகளில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான டிப்போக்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகியன பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன் மற்றும் பஸ்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் அருகிலுள்ள டிப்போக்கள் ஊடாக எரிபொருளை விநியோகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.