
கொழும்பு, ஜுலை 26
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மறைந்திருப்பதாக தான் நம்பவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் அமைச்சரவை சந்திப்பில் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.