இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

இந்து சமயத்தின் முக்கிய விரதங்களுள் ஒன்றான ஆடி அமாவாசை விரதம் எதிர்வரும் 2022.07.28 ஆம் திகதி அனுட்டிக்கப்படவுள்ளது.

நீர் நிலைகளில், குறிப்பாக கடற்கரைகளிலேயே இவ்விரதத்திற்கான தர்ப்பண வழிபாட்டு முறைகளை நிறைவேற்றுவது வழக்கம்.

அந்த வகையில் கொழும்பு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக கொழும்பு-06 வெள்ளவத்தையில் அமைந்துள்ள புகையிரத நிலையத்திற்கு அண்மையில்(மியாமிக்கு எதிர்ப்புறம்) உள்ள கடல் சங்கமத்திலேயே குறித்த வழிபாடுகளை நிகழ்த்தி வந்துள்ளனர்.

இவ்வருடமும் அதேபோல் கோவிட்-19 பரவுதலை தடுக்கும் நோக்கோடு சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கொழும்பு-06 வெள்ளவத்தையில் அமைந்துள்ள புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் (மியாமிக்கு எதிர்ப்புறம்) காலை 6.00 மணி முதல் பிதிர்க்கடன் செலுத்துவதற்கு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்துப்பண்பாட்டு நிதியத்தினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *