போராட்டகாரர்களை 71, 89இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போன்று அடக்கியிருக்க வேண்டும்! மொட்டு எம்.பி. ஆவேசம்

மே 9ஆம் திகதி கோட்டகோகம பிரதேசத்தில் தாக்குதல் நடத்த வந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செயற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்தார்.

போராட்டகாரர்களை, 71, 89 இல் ஏற்பட்ட கிளர்ச்சிகளை போன்று அடக்கியிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாததால், கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

போராட்டம் நடக்கும் பகுதியில் போதைக்கு அடிமையானவர்கள், கஞ்சா அடிமைகள், ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவ் நாட்டை வழங்கும் போது நம் நாடு பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் காணப்பட்டது.

அந் நேரங்களில் 2 ட்ரில்லியன் பெறுமதி கடன் ஏற்பட்டிருந்தது. அத்துடன் யுத்தமும் நிறைவுற்றிருந்தது.

பின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயற்பாடுகளினால் மட்டுமே அன்று நுரைச்சோலை அமைத்து நமக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

இவ்வாறு காணப்பட்ட நிலையில், மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அப்போது கடன் அளவு 14 ட்ரில்லியனாக காணப்பட்டது. எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லை

பின் கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்தார். அந் நேரங்களில் பல பிரச்சினைகள் உருவாகின. கொவிட் தொற்று ஏற்பட்டது.

ஆசிரியர்கள் வீட்டில் இருந்து சம்பளம் பெற்றனர், அவ்வாறான சங்கடமான நிலையிலும், தட்டுப்பூசிகள் வழங்கினார். அதற்கும் எதிர்கட்சி தரப்பினர் தட்டுப்பூசிகள் பெற வேண்டாம் என்று பல பிரச்சினைகளை உருவாக்கினர்.

அந் நேரத்தில் டொலர் இல்லை, எனவே இனி எரிபொருள் தட்டுப்பாடு வரும் என்று எரிசக்தி அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.

இன்று என்ன நடந்துள்ளது கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ வெளியேறியுள்ளனர். என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *