ஆடி அமாவாசை தினத்தன்று விசேட விடுமுறை:ஆறு திருமுருகன் கோரிக்கை!

எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தன்று விசேட லீவு வழங்க ஆவண செய்யுமாறு தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தனது கையொப்பத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (26.7.2022) மதியம் வடக்கு ஆளுநருக்கு மின் அஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாளை வியாழக்கிழமை(28.7.2022) ஆடி அமாவாசை தினம். சைவமக்கள் தந்தையை நினைந்து பிதிர்க்கடன் செய்யும் முக்கியமான விரத வழிபாட்டு நாள்.

எனவே, பாடசாலைகள், திணைக்களங்கள் வியாழக்கிழமை லீவு வழங்கி ஏனைய தினத்தில் கடமைகளை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு சைவமக்கள் சார்பில் அன்புடன் வேண்டுகின்றேன் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *