கிளிநொச்சியில் இருந்து 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கயில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடியினால், இன்றும் ஆறு பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் இத்தாவில் பளையைச் சேர்ந்த ஆறு பேரே இவ்வாறு சென்றுள்ளனர்.

இரு ஆண்கள், ஒரு பெண் மற்றும் 3 சிறுவர்களே அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இன்று காலை சென்றடைந்தவர்களை மரைன் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையை அடுத்து மண்டபம் முகாமில் ஒப்படைக்கவுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *