யாழ்.நுணாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுருமார், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று எரிபொருள் விநியோகம்

யாழ், ஜுலை 27

யாழ்.நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதகுருமார் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தலைவர் வைத்திலிங்கம் சிவராசா தொிவித்திருக்கின்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல சிரமத்தின் மத்தியில் எரிபொருள் பெற்று வருகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய நடைமுறைகளின் கீழ் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருளினை மக்களுக்கு வழங்கி வந்திருந்தோம்.

இவ்வாறான சூழ்நிலையில் வடமாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் வைத்தியசாலை செல்வதற்கும் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்வதற்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமப்பட்டு வருவதை அவதானிக்கிறோம்.

ஆகையால் இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவித்தார். அந்தவகையில் மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபாய்க்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாய்க்கும் கார்களுக்கு 3500 ரூபாய்க்கும் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *