தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள், அவர்களுக்கு முன்பாக சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது முச்சக்கரவண்டியுடன் மோதி பின்னர், மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விபத்தின்போது சம்பவ இடத்திலேயே குறித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் தன்னாமுனைப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தையடுத்து குறித்த லொறியின் சாரதியை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *