கடல் மார்க்கமாக வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 7 பேர் சிக்கினர்!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 07 பேரையும், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வென்னப்புவ – நைனாமடம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, ஜா-எல மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் மூன்று சிறு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *