நம்பகத் தன்மையை அறிய புதிய செயலி

கொழும்பு, ஜுலை 27

மதுபானங்களின் நம்பகத்தன்மையை கண்டறியும் வகையில் புதிய அலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, குறித்த அலைபேசி செயலியானது ஒழுங்குப்படுத்தும் திட்டமாக இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வெளிநாட்டு மதுபானங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் கலால் திணைக்களத்தால் இன்று மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *