திருகோணமலை பகுதியில் ஒன்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு உபகராணங்களை திருடிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (25) இரவு 08 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மற்றும் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட எட்டுப் பேரையே கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பகுதியுள்ள வீடொன்றை உடைத்து அங்கிருந்த மின்விசிறி, தையல் இயந்திரம், ஒலிப் பெருக்கி சாதனங்கள், இசைக்கருவி மற்றும் மின்னழுத்தி போன்ற உபகரணங்களை திருடி, சந்தேகநபர்கள் விற்பனை செய்துள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பிறசெய்திகள்