ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு ரணில் அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அரசாங்கத்தில் இணைந்து கொள்வாரா இல்லையா என்பது தொடர்பில் ஹர்ஷ டி சில்வா இதுவரை தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ள போதிலும், அதில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிறசெய்திகள்