மனிதாபிமான உதவியின் கீழ் 500 மில்லியன் யுவான் பெறுமதியில் சீனா வழங்கிய 5 ஆவது தொகுதி அரிசி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1000 மெட்ரிக் டன் அரிசி உள்ளடங்கியுள்ளதாகவும், அவை பாடசாலை மாணவர்களின் மதிய உணவு தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை சீனா மொத்தமாக 4,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்கியுள்ளது.
மேலும் 6,000 மெட்ரிக் டன் அரிசி சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதுடன், இலங்கையில் உள்ள 7,900 பாடசாலைகளில் உள்ள 11 மில்லியன் மாணவர்களுக்கு, குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு இந்த அரிசி போதுமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்