இன்றைய நாடளுமன்ற சபை அமர்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்:
நாம் நாட்டுக்கு என்ன செய்யவேண்டும் என்று எமக்கு தெரியும்.
நீங்கள் இனி புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை.போராட்டங்களை முடக்கி மிலேச்சதனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறீர்கள்.உங்களோடு சேர்ந்து செயற்பட நாம் தயாராக இல்லை.
நாம் எதற்கும் ஆசைப்படவில்லை.பயங்கரவாதிகளை வைத்துள்ள இந்த அரசுடன் சேர்ந்து நாம் செயற்பட மாட்டோம்.
மக்கள் இப்போதும் கோட்டா ரணில் ஆட்சி வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள்.அதை நீங்கள் மறக்க வேண்டாம் என்றார்.
பிறசெய்திகள்