முச்சக்கரவண்டிகளிற்கு எரிபொருள் வழங்குவதற்காக பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்து பதிவு ஸ்டிக்கர் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உவர்மலை, மட்கோ, லிங்கநகர் மற்றும் அபயபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகளது வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று காலை திருகோணமலை தலைமயக பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் தமது வாகணங்களை முண்கூட்டியே பதிவு செய்து தமது ஸ்டிக்கர்களை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏனைய கிராம சேவகர் பிரிவுகளுக்கு எதிர்வரும் நாாட்களில் தொடர்ச்சியாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தபடும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிறசெய்திகள்