மிகுந்த அச்சத்துடன் வாழும் வாழைச்சேனை மக்கள்! பின்னணி என்ன?

வீட்டு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று (26) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 2 ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

வீட்டு உரிமையாளார்கள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் நுழைந்த திருடன் அங்கிருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளான்.

வீட்டிலிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6 பவுண் தங்க நகைகளை திருடன் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகைகளை திருடிய திருடன் அங்கிருந்து செல்லும் காட்சி CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் அச்சத்துடன் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *