63 வயது மூதாட்டி மீது வன்புணர்வு முயற்சி! – 15 வயதுச் சிறுவன் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் 63 வயதான மூதாட்டி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 15 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:–

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் மீன் விற்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மூதாட்டியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்து குறித்த சிறுவன் தனது சைக்கிளில் ஏற்றியுள்ளான்.

அதன் பின்னர் பொன்னாலை காட்டுப் பகுதிக்குள் குறித்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான். மூதாட்டி சிறுவனின் கைகளைக் கடித்துவிட்டு கூக்குரலிட்டதை அடுத்து சிறுவன் தப்பியோடியுள்ளான்.

இதையடுத்து மூதாட்டி வழங்கிய முறைப்பாட்டின் பேரில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். கைதான சிறுவனிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *