
கொழும்பு, ஜுலை 27
நக்டா நிறுவனத்தின் ஊடாக நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டங்களுக்கு, நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புக்ளையும் வினைத்திறனுடன் ஒருங்கிணைத்து, திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடினார்.
கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.