ரணில் ராஜபக்ச கூட்டு அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று பிற்பகல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தை சுருட்டிக்கொள், போராட்டத்திற்கு எதிரான அடக்குமுறையை நிறுத்து என்னும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.மிக அதிகளவான போராட்டக்காரர்கள் இதில் இணைந்து கொண்டுள்ளனர்.
மேலும் வெகுசன அமைப்புக்களின் கூட்டமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பாரிய போராட்டமாக இதனை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.