அபிஷேகக் கந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கருவரையில் வீற்று அருள்பாலித்து விளங்கும் அபிஷேகக் கந்தன், வள்ளி, தெய்வானை சகிதம் உள் வீதி,வெளி வீதி உலா வந்து தேர் ஏறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பூஜைகளை ஆலய பிரதம குரு து.இரத்தினசபாவதிக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.
மேலும் கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான வருடாந்த திருவிழா நாளை தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும்.