பணிப் புறக்கணிப்புக்குத் தயாராகும் சுகாதாரப் பணியாளர்கள்

வவுனியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார பணியாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார பணியாளர்களுக்கென விசேட தினத்தில், தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்க வேண்டும் என கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வைத்தியசாலை பணியாளர்களிற்காக விசேட தினத்தில் தனியொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இச்செயற்பாடானது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டதுடன், பொதுமக்களின் வரிசையின் ஊடாகவே எரிபொருளினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தமது கடமைக்கு உரிய நேரத்திற்கு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிலை மாற்றப்பட்டு தமக்கென தனியான ஒரு தினத்தில் எரிபொருள் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதுடன் இந்நிலை தொடருமாயின் தொடர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *