
கொழும்பு,ஜுலை 26
மக்களால் முற்றாக விரட்டியடிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, தம்மை பாதுகாத்து கொள்வதற்காகவே அவசரகால சட்டத்தை கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், போராட்டக்காரர்களை தேடியழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள், பல்லாயிரக்கணக்கான டொலர்களை கொண்டு வந்து இலங்கையில் முதலிட ஆயத்தமாகியிருக்கிறார்கள்.
எனவே சமஸ்டி தீர்வுக்கு அரசாங்கம் செல்லவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.