சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தான் புதிய அரசாங்கத்தினால் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார்.
SJB பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு முனைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
செய்திகளுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா, இந்த வதந்தியில் தன்னைப் பற்றிய குறிப்பை 100% மறுப்பதாக தெரிவித்தார்.
ஊகிக்கப்படும் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினருடனும் தாம் கலந்துரையாடவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்