மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான ஒரு தொகுதி அவசர மருத்துவ பொருட்களை, மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) இன்று மாலை கையளித்துள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த மருத்துவப் பொருட்கள் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால்,மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கையளிக்கப்பட்டது.
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ குறித்த மருத்துவ பொருட்களை
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய குழுவினரிடம் கையளித்தார்.
பிறசெய்திகள்