அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

அம்பலாங்கொடை,ஜுலை 27

அம்பலாங்கொடை, கலகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்று (27) பிற்பகல் காரொன்றில் வந்த நபரொருவரால், கம்பஹா மாகாண மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் சமன் ரோஹித எனப்படும் பஸ் பொட்டா சுடப்பட்டார்.

இன்றைய விசாரணைக்காக நீதிமன்றத்திலிருந்து புறப்படுவதற்காக காரில் ஏறிய போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காரில் அவர் உட்பட 6 பேர் இருந்தனர், அவர்களில் 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.

சமன் ரோஹித்த என அழைக்கப்படும் பஸ் பொட்டா என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் உள்ளதாக கம்பஹா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *