டுபாய் செல்ல முயன்ற போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட தனிஸ் அலியை ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரை இன்று பிற்பகல் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவர் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் வெபாடா பகுதியைச் சேர்ந்த 31 வயதான தனிஷ் அலி.
ஜூலை 13ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சில நபர்களுடன் பிரவேசித்து மிரட்டல் விடுத்து சிறிது காலத்திற்கு ஒளிபரப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்திய சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் இவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கடந்த ஜூன் 09ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்