தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையாக அமைந்த கறுப்பு யூலை-83 பெருந்துயரின் நினைவேந்தலும், கவனயீர்ப்பு நிகழ்வும் ஒன்றாரியோ சபை முன்றலில் இடம்பெற இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வானது Legislative Assembly of Ontario ,
111 Wellesley St W, Toronto, ON M7A
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29-07-2022) மாலை 2 மணி முதல் 6 மணி வரை இடம்பெற இருக்கின்றது.
கறுப்பு யூலை-83 இனப்படுகொலையில் கொலையுண்ட உறவுகளை நினைவேந்தி ‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் கடந்த 23ம் தேதி குருத்திக்கொடை நிகழ்வும் கனடாவில் இடம்பெற்றிருந்தது.
இற்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள பௌத்த இனவாதத்தினால் நடத்தப்பட்ட இந்த இனஅழிப்பினை எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார் செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு இன்றுவரை நிறைவேற்றவில்லை.
ஐ.நாவுக்கு கொடுத்த இந்த வாக்குறுதி முதற்கொண்டு இற்றைவரை அனைத்துலக சமூகத்தினை பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு ஏமாற்றியும் நாடகமாடியும் வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
பிறசெய்திகள்