நாடளாவிய ரீதியிலுள்ள உப தபால் அலுவலகங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களையும் இன்றைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் போக்குவரத்து சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தபால் அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *