அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது – சஜித்!

அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஒடுக்கும் இந்த அரசாங்கத்துடன் கொடுக்கல், வாங்கல் இல்லை எனவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குழுக்களில் தலைமைப்பதவிகளை ஏற்பதற்கு தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிரணியில் இருந்து ஒத்துழைப்பு வழங்கத்தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *