வீடு புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை! – இரத்மலானையில் சம்பவம்

இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியில், நேற்று இரவு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

வீட்டினுள் நுழைந்த இருவர் அங்கிருந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இரத்மலானை – சில்வா மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கு டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ காவல்துறையினர் மேற்கொள்வார்கள்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *