பஸில் அரசியலினை விட்டு ஒதுக்கவில்லை – இந்திக்க அநுருத்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் தேசிய அமைப்பாளராக பஸில் ராஜபக்ச தீவிரமாக செயற்பட்டு வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பஸில் ராஜபக்ச செயற்பாட்டு அரசியலுக்கு வருவாரா என்பது தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தேசிய அமைப்பாளராக அவர் கட்சியை வழிநடத்துவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது கட்சி மறுசீரமைப்பு பணி இடம்பெற்றுவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *