கீரிமலையில் ஆடி அமாவாசை விரத உற்சவ நிகழ்வுகள்!(படங்கள் இணைப்பு)

இந்து மக்களால் பிதாவினை இழந்தவர்களுக்கு உன்னதமான விரதங்களில் ஒன்றான ஆடிஅமாவாசை விரத உற்சவம் இன்று வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை கண்டாங்கி கடற்கரை தீர்த்தகேணியில் சிறப்பாக காலையில் இடம்பெற்றது..

இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க அபிஷேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுர கந்தசாமி ஆலயம்,கீரிமலை நகுலேஸ்வர்,நகுலாம்பிகை தேவஸ்தானம் உள்ளடங்களாக, தெய்வங்களாகிய அபிசேககந்தன்,வள்ளி,தெய்வானை,சண்டேஷ்வர் ஆகிய தெய்வங்கள் மயில் வாகனத்தில் வீற்றும் பிள்ளையார் எலிவாகனத்திலும் நகுலேஸ்வர்,.நகுலாம்பிகை ,இடபவாகனத்திலும்,அம்பாள்,சிம்மவாகனத்திலும்,பஞ்சரக தெய்வங்கள் கீரிமலை கண்டான கடற்கரை தீர்த்தகேணியில் தீர்த்தமாடினர் .

ஆடிஅமாவாசை விரத உற்சவத்தினை பிரதம குரு து.இரத்தினசபாவதிக்குருக்கள்,இராஜ இராஜஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளையும்,கீரிமலை மண்ட கிரியைகளை நடாத்திவைத்தனர்.

யாழ் மாவட்டத்தில் பலபாகங்களில் இருந்து பக்தர் அடியார்கள் பலரும் கலந்துகொண்டு தமது பிதிர்கடன்களையும் முடித்தும் ஆடி அமாவாசையில் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை கண்டாங்கி கடற்கரை தீர்த்தகேணியில் நீராடிச்சென்று வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *