இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு!

இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று(வியாழக்கிழமை) அதிகாலை வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் 30 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இளைஞரின் மனைவியும் வீட்டிலிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *