தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம்; புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேசத் தயார்! நீதி அமைச்சர்

தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்தக் கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்க்ஷ சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *