ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொய்யான சாட்சியங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகளான சஞ்சீவ மொராயஸ், தமித் தொட்டவத்த மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் சாட்சிய விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
பிறசெய்திகள்