திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைச் சேனை மைதானத்தில் வைத்து லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நேற்று (27) வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிவாயுவினை பெறுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதனை கருத்திற் கொண்டு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியின் மேற்பார்வையில் சுமார் 2000 சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் விநியோக நடவடிக்கை மிக நீண்ட நாட்களின் பின் இடம் பெற்றது.
மே மாத மின்சார பட்டியலை வைத்து விநியோகம் சீராக இடம் பெற்றதுடன் இதனை பெற மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர்.

பிறசெய்திகள்