மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை!

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களித்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம், நாடாளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

அவசரகால எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா உட்பட மொட்டு கட்சி எம்.பிக்கள் சிலரும் எதிராக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *