இன்டைக்கு வாங்கோ பெற்றோல் அடிக்கலாம்..! அறிவிப்பை நம்பி நடுவீதியில் நிற்கும் மக்கள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பாஸுக்கு எரிபொருள் நிரப்பப்படுகிறது.QR Code அடிப்படையில், வாகன இறுதி இலக்கத்துக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.

நாளை எரிபொருள் வழங்கப்படும் இடங்கள்,மாவட்டச் செயலகங்களால் தீர்மானிக்கப்பட்டு முதல் நாளே மக்களுக்கு அறிவிக்கப்படும் வழமை காணப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்,எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது வரை அதற்கான ஒழுங்குகள் நடைபெறவில்லை. நேற்று மாலை முதல் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த மக்கள்,இன்று மதியம் 12 மணி வரை எரிபொருள் வழங்கப்படாமையால் குழப்ப நிலையை அடைந்துள்ளனர்.

இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் மக்கள் முரண்பட்ட நிலையில், இன்று எரிபொருள் வழங்குவது தொடர்பில் தீர்க்கமான பதில் கிடைக்காமையால் குறித்த பகுதியில் சற்று குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *